எமது விடுதலைப் போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழீழ அரசியல் பிரிவின் நேரடி வழிப்படுத்தலுடன் பல ஆக்கபூர்வமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி எமது போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகவும் தேசிய தலைவரின் பாசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர்.
அன்னார் ஒரு சிறந்த வானொலி ஒலிபரப்பாளராகவும் சிறந்த ஊடகவியலாளராகவும் சேவையாற்றி தொடர்ந்தும் விடுதலைப் போராட்டம் தொடர்பான பல அரசியல் பரப்புரைகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். இவர் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் தமிழ் இலக்கியம் மற்றும் உலக அரசியல் பற்றிய ஆழமான அறிவுடையவராகவும் அறியப்பட்டார்.
மெல்பேர்ன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் இணைப்பாளராகத் தமிழீழ மண்ணுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் சேவையாற்றி இயற்கை எய்திய அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது கண்ணீர்துளிகளை காணிக்கையாக்குகின்றோம்.